பெய்ருட், டிச 11 – ஹிஸ்புல்லாஹ் தரப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக ட்ரோன்கள் மற்றும் ஏவுகனை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேலுடனான எல்லையைக் கொண்ட தென் லெபனான் வட்டாரத்தில் இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தென் லெபனானில் உள்ள பல்வேறு முக்கிய நகர்ப் பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன் காசாவில் இஸ்ரேல் போர் தொடங்கியது முதல் ஈரான் ஆதரவிலான ஹிஸ்புல்லாஹ் தரப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது .
ஐடரூன் நகரில் இஸ்ரேல் விமானங்கள் வீசிய குண்டு வீச்சு தாக்குதலில் ஐந்து வீடுகள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் உடனடியாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.