Latestமலேசியா

சுங்கை பூலோவில் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து நான்காம் படிவ மாணவி மரணம்

சுங்கை பூலோ, மார்ச் 23 – சிலாங்கூர் சுங்கை பூலோவில் இடைநிலைப் பள்ளியொன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து நான்காம் படிவ மாணவி உயிரிழந்தார்.

புக்கிட் ரஹ்மான் புத்ராவில் நேற்று காலை 11 மணிக்கு மேல் அச்சம்பவம் நிகழ்ந்தது.

உயரமான இடத்தில் இருந்து விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 16 வயது அம்மாணவி மரணமடைந்தது சவப்பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டது.

இதையடுத்து அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டதாக சுங்கை பூலோ போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் மொஹமட் ஹவிஸ் முஹமட் நோர் சொன்னார்.

அம்மாணவி இறந்துக் கிடக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படத்தையோ வீடியோக்களையோ பகிர்வதைத் தவிர்க்குமாறும் அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!