Latestமலேசியா

சையிட் டானியல் கொலை வழக்கு ; முன்னாள் தொடர்பு தொழில்நுட்ப பணியாளருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபனமானது

ஷா ஆலாம், டிசம்பர் 5 – நான்காண்டுகளுக்கு முன், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், சையிட் முஹமட் டானியல் சையிட் சாகிர் கொலை செய்யப்பட்ட வழங்கில், முன்னாள் தொடர்பு தொழில்நுட்ப பணியாளரான இயூ வெய் லியாங்யே குற்றவாளி என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இயூவிற்கு எதிரான குற்றச்சாட்டை, அரசாங்க தரப்பு வழக்கறிஞர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்ததால், நீதிபதி அந்த தீர்ப்பை அறிவித்தார். சுய பாதுகாப்பு காரணமாக சையிட்டை தாக்கியதாக கூறப்படுவதை, இயூ தரப்பு வழக்கறிஞர்கள் தான் நிரூபித்திருக்க வேண்டும்.

எனினும், அதில் அவர்கள் தோல்வி கண்டதால், கிளந்தானை சேர்ந்த இயூ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுவதாக, நீதிபதி தெரிவித்தார். அவருக்கான தண்டனை இன்று மாலை அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, 2019-ஆம் ஆண்டு, ஆகஸ்ட்டு பத்தாம் தேதி, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், சுங்கை பெசி டோல் சாவடிக்கு அருகில், தென் மாநிலங்களை நோக்கி செல்லும் பாதையில் நிகழ்ந்த சிறு விபத்து காரணமாக, வங்கி அதிகாரியான சையிட் டானியல் தாக்கப்பட்டத்தில், மருத்துவமனையில் பின்னர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!