Latestமலேசியா

சூப்பர் மார்க்கெட்டில் 7 வயது சிறுமியிடம் ‘ஆபாச சேட்டை’; நேப்பாள ஆடவன் கைது

ஜியோர்ஜ்டவுன், மார்ச் 9 – பினாங்கில், சூப்பர் மார்க்கெட்டில் வைத்து 7 வயது சிறுமியிடம் ஆபாச சேட்டை புரிந்த சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு ஆடவன் கைதாகியுள்ளான்.

30 வயது மதிக்கத்தக்க அந்த நேப்பாள ஆடவனிடம் முறையான பயண பத்திரம் எதுவும் இல்லை என தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ACP ரஸ்லாம் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

Bukit Jambul Complex-சில் உள்ள அந்த சூப்பர் மார்கெட்டில் வியாழக்கிழமை மாலை 6.50 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

தனது தாயுடன் Check Out கவுண்டரில் வரிசையில் நின்ற போது, அச்சிறுமியை நெருங்கிய அவ்வாடவன், பின்னாளில் இருந்து அவளைத் தடவியிருக்கிறான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், அருகில் இருந்தவர்களிடம் அதனைக் கூற, அவர்கள் அவனைப் பிடித்து நையப்புடைத்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடியவனை, அருகில் இருந்த மற்றொரு சூப்பர் மார்கெட்டின் பின்புறம் வைத்து பொது மக்கள் பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர்.

தாக்கப்பட்டதில் முகத்தில் காயமடைந்த அவன் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

2017-ஆம் ஆண்டு சிறார் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக அவன் 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!