கெந்திங் மலை, பிப் 26 – கெந்திங் மலைக்குச் சுற்றுலா சென்ற பெண் ஒருவரைக் குரங்கு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெந்திங் மலையிலிருந்து இறங்கும் போது, குடிநீர் எடுக்கவும், கைகளைக் கழுவவும் வாகனத்தை விட்டு வெளியேறிய பெண்ணை, பெரிய குரங்கு ஒன்று விரட்டி தாக்கியுள்ளது.
‘குரங்கு ராஜா’ என்று குறிப்பிடப்படும் அந்த ஆக்ரோஷமான குரங்கு அந்த பெண்ணை குறிவைத்து தாக்கத் தொடங்கியதில் நிலைமை மோசமடைந்துள்ளது.
இதற்கிடையில், அவரது குடும்பத்தினரும் இந்த நிகழ்வைப் பதிவேற்றம் செய்தவரும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்து உடனடியாக காரை நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண் அந்த குரங்கைச் சாதுரியமாக எட்டி உதைத்து, விரைவாக வாகனம் அருகே சென்று உதவி கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த குரங்கை பயமுறுத்துவதற்கு ஹான் அடிக்கப்பட்டுள்ளது.
இதனிடைய பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்ட பாதிக்கப்பட்டவரும் அவரது குழந்தைகளும் இச்சம்பவத்தால் மிகவும் பயந்து நடுங்குவதை இவர்களுக்கு உதவிய அந்த நபர் தனது சமூக வலைத்தளத்தில் காணொளியாக பதிவு செய்திருக்கிறார்.