Latestமலேசியா

ஐந்து மாநிலங்களில், டிசம்பர் 19-ஆம் தேதி வரை அடை மழை எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 15 – நாட்டிலுள்ள ஐந்து மாநிலங்களில், இன்று தொடங்கி, இம்மாதம் 19-ஆம் தேதி வரையில், அடை மழை எச்சரிக்கையை, மெட்மலேசியா – வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.

கிளந்தான், திரங்கானு, பஹாங், ஜொகூர், சபா ஆகியவையே அந்த ஐந்து மாநிலங்கள் ஆகுமென, மெட்மலேசியா தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

பஹாங்கில் ரோம்பின், ஜொகூரில் குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு, சபாவில் கிழக்குகரை, சண்டகான், கூடாட் ஆகிய பகுதிகளில், இம்மாதம் 18,19-ஆம் தேதிகளில், அடை மழை தொடர்ந்து பெய்யுமென மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று மாலை, பெர்லிஸ், கெடா, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா கூட்டரசு பிரதேசங்கள், நெகிரி செம்பிலான், ஜொகூர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய அடை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

பேராக், பஹாங், பினாங்கு, மலாக்கா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களிலும் அதே நிலை நீடிக்கும்.

சபா, லபுவான், தாவாவ், சரவாக், கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெந்தோங், சரிகாய், மூக்கா, காபிட், மீரி, லிம்பாங் ஆகிய இடங்களிலும் அடை மழை பெய்யும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!