ஜியோர்டவுன், பிப்ரவரி-21, பினாங்கு, ஜியோர்டவுன், ஜாலான் புக்கிட் காம்பீரில் உணவு அனுப்பும் p-hailing ஓட்டுநரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
பாலிக் பூலாவைச் சேர்ந்த 27 வயது அவ்விளைஞர் கடுமையான காயங்கள் காரணமாக உயிரிழந்ததாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ரஸ்லான் அப்துல் ஹமிட் சொன்னார்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்து, சம்பவ இடம் விரைந்த போது, Yamaha Y16 மோட்டார் சைக்கிளில் வந்த அவ்வாடவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாக ரஸ்லான் கூறினார்.
தடுப்பில் மோதியதால் ஏற்பட்ட கடுமையான தாக்கத்தால் அந்நபர் உயிரிழந்ததை சுகாதாரப் பணியாளர்கள் உறுதிபடுத்தினர்.
சடலம் சவப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, அச்சம்பவம் சாலைப் போக்குவரத்து சட்டத்தின் 41-வது பிரிவில் கீழ் விசாரிக்கப்படுகிறது.