ஈப்போ, பிப் 12 – பசும் பால் விற்பனையாளரைக் போல் நடித்து ஒரு பெண்ணின் கழுத்திலிருந்து இரண்டு தங்க சங்கிலிகளை அபகரித்துச் சென்ற ஆடவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சோங் ரம்புத்தானில் தையல்காரப் பெண் ஒருவர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் யஹாயா ஹாசன் தெரிவித்திருக்கிறார். உள்நாட்டைச் சேர்ந்த ஆடவன் என நம்படும் ஒருவன் காலை 9 மணியளவில் 38 வயது பெண்ணிடம் அந்த நகைகளை அபரிகரித்துச் சென்றுள்ளான்.
பால் வாங்க வந்த அப்பெண்ணை திடிரென தள்ளியபின் அவரது கழுத்திலிருந்து தங்கச் சங்கிலிகளை அபகரித்துள்ளான். பாதிக்கப்பட்ட பெண் கூச்சல் போடத் தொடங்கியதும் அவரை தாக்கியபின் அந்த சந்தேகப் பேர்வழி மோட்டார் சைக்கிள் மூலம் அங்கிருந்து தப்பிச் சென்றதாக யஹாயா ஹாசன் கூறினார். திருமணத்தின்போது போடப்பட்ட சங்கிலியும் ,தமது தந்தை வாங்கித் தந்த சங்கிலியும் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் செய்துள்ளார்.