Latestமலேசியா

சுங்கை பட்டாணியில் மறுசுழற்சி தொழிற்சாலையில் பெரும் தீ

சுங்கை பட்டாணி, ஜனவரி-25, கெடா, சுங்கை பட்டாணி, தாமான் ரியாவில் உள்ள மறுசுழற்சி தொழிற்சாலை, இன்று அதிகாலை ஏற்பட்ட தீயில் 80 விழுக்காடு அழிந்துபோனது.

அதிகாலை 2.30 மணிக்கு தகவல் கிடைத்து தீயணைப்பு-மீட்புப் துறையினருடன், TNB பணியாளர்களும் போலீஸாரும் உதவிக்கு வந்தனர்.

காலை 6 மணிக்குள்ளாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீ ஏற்பட்ட போது தொழிற்சாலையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வரும் வேளை, மொத்த சேதமும் மதிப்பிடப்பட்டு வருவதாக தீயணைப்புத் துறை கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!