Latestமலேசியா

சுபாங் ஜெயாவில் போக்குவரத்திற்கு தடையாக இருந்த காரை மலேசியர்கள் தூக்கி வைத்து அப்புறப்படுத்தினர்

சுபாங் ஜெயா, ஏப் 28 – புத்ரா ஹைட்ஸ், Jalan Putra Mahkota 7/6B யில் இரட்டை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்ற வாகனங்களின் போக்குவரத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்ததைத் தொடர்ந்து அக்காரை தூக்குவதில் மலேசியர்கள் ஒன்று திரண்டனர்.

ஆண்களைக் கொண்ட ஒரு குழுவினர் சிவப்பு பெரோடுவா ஆக்சியாவைத் தூக்குவதைக் காண முடிந்ததோடு அக்கார் பொறுப்பற்ற முறையில் நிறுத்தப்பட்டு, கடைகளுக்கு அருகே கார்கள் செல்வதற்கு தடையாக இருந்ததை Alianadhierah என்ற பயணர் பகிர்ந்திருந்த வைரலான Tik Tok காணொளியில் அறியமுடிந்தது.

பெரோடுவா ஆக்சியா 850 கிலோ முதல் 890 கிலோ வரை எடையுள்ளதாக இருந்தபோதிலும், அந்தக் குழுவினர் காரை வெற்றிகரமாகத் தூக்கினர். சிந்தனையற்ற அக்காரின் ஓட்டுநர் தொடர்பு எண்ணை விட்டுச் செல்லத் தவறிவிட்டார் என்று Alianadhierah தெரிவித்தார்.

பின்னர் அடுத்தடுத்த வீடியோவில் போக்குவரத்து போலீசாரால் அக்காரின் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் தெரியவந்தது. 321,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 109 கருத்துகளையும் பெற்ற இந்தப் பதிவு, நெட்டிசன்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளையும் பெற்றது.

பொறுப்பற்ற ஓட்டுநரின் அந்த செயலை சிலர் கடுமையாக சாடினர். இன்னும் சில நெட்டிசன்கள் அந்த காரை கூட்டாக தூக்கிய ஆண்களை குழுவின் கருணையைப் பாராட்டினர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!