ஜோகூர் பாரு, மார்ச் 18 – கடந்த பத்தாண்டுகளாக தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு ஜோகூரில் செயல்படும் நகைக்கடை ஒன்று புத்தம் புதிய காரைப் பரிசாக வழங்கி, அவரை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துள்ளது.
Tiansi Jewelery எனும் அந்த நகைக்கடை, 86,300 ரிங்கிட் மதிப்பிலான Proton X50 காரை அவருக்கு பரிசளித்துள்ளது.
இடைவிடா முயற்சிகளையும் குறிப்பிடும்படியான பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாக இந்த காரை பரிசளித்ததாக அந்நகைக்கடை தெரிவித்துள்ளது.
மேலும், கார் கொடுக்கப்பட்டது ஊழியருக்கு நன்றி தெரிவிப்பதற்காக மட்டுமல்லாது, வேலையில் சிறந்து விளங்குவோரை நிறுவனம் ஊக்குவிக்கும் என்பதை வலியுறுத்தவும்தான் என்று அக்கடைகூறியுள்ளது.
இதனிடையே அந்தப் பெண் ஊழியர், தனக்குக் கார் கிடைத்தது குறித்து சமூக ஊடகம் வழியாகப் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.