நியூயார்க்கு, பிப் 26 – சமீபத்தில் அமெரிக்க எல்லையில் மூன்று பர்மிய மலைப்பாம்புகளை தனது கால்சட்டையில் கடத்த முயன்ற நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த ஆடவன் ஒருவனை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், அவனது பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது, அவரது கால்சட்டையுடன் இணைக்கப்பட்ட சிறிய பையில், அவரது உள் தொடைக்கு அருகில் அந்த 3 பாம்புகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
வன உயிரினங்கள் குறிப்பாக அழிந்து வரும் உயிரினங்களான பாம்புகள் கடத்தப்படும் சம்பவங்களைத் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
அவ்வகையில், 38 வயதான அந்த ஆடவனுக்கு பாம்புகளை கடத்திய குற்றச்சாட்டிற்காகச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பர்மிய மலைப்பாம்புகள்தான் உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாகும். ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த பாம்புகள், அழிவை எதிர்நோக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக 2018லும், அமெரிக்க கனடா எல்லையைத் தாண்டிய பேருந்தில் பயணித்தபோது, இந்த பாம்புகளை கடத்திய குற்றச்சாட்டையும் அந்த ஆடவன் ஒப்புக்கொண்டான்.