Latestமலேசியா

குவாலா கங்சார் நெடுஞ்சாலையில், விபத்துக்குள்ளான ஐஸ் லோரியில் சிக்கி இருவர் காயம்

குவாலா கங்சார், மார்ச் 22 – பேராக், குவாலா கங்சாருக்கு அருகில், நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான, ஐஸ் லோரியில் சிக்கிக் கொண்டிருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அதிகாலை மணி 2.11 வாக்கில், அவ்விபத்து நிகழ்ந்தது.

லோரியில் சிக்கிக் கொண்டிருந்த ஒருவர் காலில் காயத்திற்கு இலக்கான வேளை ; மற்றொருவருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருந்தது.

அவசர அழைப்பு கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த குவாலா கங்சார் மற்றும் மேரு ராயா தீயணைப்பு மீட்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், விபத்துக்குள்ளான ஐஸ் லோரியில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!