குவாலா கங்சார், மார்ச் 22 – பேராக், குவாலா கங்சாருக்கு அருகில், நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான, ஐஸ் லோரியில் சிக்கிக் கொண்டிருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அதிகாலை மணி 2.11 வாக்கில், அவ்விபத்து நிகழ்ந்தது.
லோரியில் சிக்கிக் கொண்டிருந்த ஒருவர் காலில் காயத்திற்கு இலக்கான வேளை ; மற்றொருவருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருந்தது.
அவசர அழைப்பு கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த குவாலா கங்சார் மற்றும் மேரு ராயா தீயணைப்பு மீட்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், விபத்துக்குள்ளான ஐஸ் லோரியில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.