Latestமலேசியா

தாய்ப் விவகாரம் தொடர்பில் போலீஸ் விசாரணை கருத்துரைக்க சரவா அமைச்சர் மறுப்பு

கூச்சிங், பிப் 12 – முன்னாள் முதலமைச்சர் துன் அப்துல் தைப் மஹ்மூட் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பில் போலீசார் மேற்கொண்டுவரும் விசாரணை குறித்து சரவா சட்டத்துறை துணையமைச்சர் டத்தோ ஷரீபா ஹசிடா கருத்துரைக்க மறுத்துவிட்டார். இது சம்பந்தமான கேள்விகளுக்கு தாம் பதில் அளிக்க முடியாது என அவர் கூறினார். அச்சம்பவம் தொடர்பில் சரவா அரசாங்கம் போலீசிடமிருந்து விசாரணை அறிக்கையை பெற்றுவிட்டதா என்று வினவப்பட்டபோது இது குறித்து கருத்துரைக்க முடியாது என ஷரீபா மறுமொழி தெரிவித்தார். கோலாலம்பூரில் தனியார் மருத்துவமனையில் தைப் சிகிச்சை பெற்றுவருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உசேன் நேற்றிரவு கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!