Latestமலேசியா

தீ விபத்தில் நான்கு வீடுகள் அழிந்தன; சிறார்கள் உட்பட அறுவர் உயிர் தப்பினர்

கோத்தா கினபாலு, பிப் 14 – கோத்தா கினபாலு, மெங்காத்தாலில் கம்போங் முஹிப்பா பாருவில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் நான்கு வீடுகள் அழிந்த வேளையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட அறுவர் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர். இரவு மணி 9.50 அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தபோது தனது கணவர் மற்றும் 8 வயது மகள் ஆகியோருடன் தூங்கிக்கொண்டிருந்ததாகவும் திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டு எழுந்ததாக 28 வயதுடைய குடும்ப மாதான சுலியானி ஐடி தெரிவித்தார். அண்டை வீட்டில் தீப்பற்றியதாக தமது குடும்பத்தை சேர்ந்த மேலும் இருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து எங்கள் வீட்டின் கதவைத் திறந்தபோது தீ வேகமாக பரவியதால் வெளியேற முடியவில்லை. வேறு வழியின்றி ஜன்னல் வழியாக எங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உயிர் தப்பினோம் என சுலியானி கூறினார். இதனிடையே இந்த தீவிபத்தில் நான்கு வீடுகள் முற்றாக அழிந்ததாக கோத்தா கினபாலு தீயணைப்பு மீட்பு நிலையத்தின் அதிகாரி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!