மெர்சிங், பிப் 9 – மெர்சிங்கிற்கு அருகே ஜாலான் எண்டாவ் -மெர்சிங் சாலையில் 10 ஆவது கிலோமீட்டரில் இரு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் மரணம் அடைந்ததோடு நால்வர் காயம் அடைந்தனர். இன்று காலை 8 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக மெர்சிங் OCPD அப்துல் ரசாக் அப்துல்லா சானி தெரிவித்தார். மெர்சிங்கிலிருந்து 35 வயது நபர் திரெங்கானுவை நோக்கி சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காருடன் மோதியது. இதனால் அந்த கார் ஓட்டுனர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்த வேளையில் அக்காரில் இருந்த அவரது 11 வயது மகன் கடுமையாக காயம் அடைந்தான். அதே வேளையில் திரெங்கானுவுக்கு சென்ற காரை ஓட்டிய ஆடவரும் கடுமையாக காயம் அடைந்தார். அக்காரில் இருந்த பயணிகளான 21 வயது இளைஞரும் 41 வயது பெண்ணும் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு படையினரின் உதவியோடு அவர்கள் மீட்கப்பட்டனர்.