Latestஉலகம்

டெக்ஸாஸில் ஆடவன் வெறித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் அறுவர் மரணம்

ஹோவ்ஸ்டன், டிச 7 – அமெரிக்காவில் டெக்சாஸை சேர்ந்த துப்பாக்கிக்காரன் ஒருவன் கண்மூடித்தனமாகவும், வெறித்தனமாகவும் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், குறைந்தது அறுவர் மாண்டதோடு இரண்டு போலீஸ்காரர்கள் உட்பட மூவர் காயம் அடைந்தனர்.

ஆஸ்டினில் பல மணி நேரம் துப்பாக்கிக்காரன் நடத்திய தாக்குதலில் நால்வர் கொலலப்பட்டனர். சான் அன்டோனியோ வட்டாரத்தில் போலீசாருக்கும் தாக்குதல்காரனுக்கும் நடந்த மோதலில் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார்.

அங்குள்ள ஒரு வீட்டில் ஒர் ஆடவரும் பெண்ணும் இறந்துகிடந்தனர். இந்த சம்பவத்திற்கு ஒருவன்தான் காரணம் என்றும் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். டெக்சாஸ் தலைநகரில் நான்கு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் கைது செய்யப்பட்ட நபருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். அந்த துப்பாக்கிக்காரன் தனது வாகனத்தில் தப்பியோடியபோது போலீஸ் காருடன் மோதியபின் கைது செய்யப்பட்டான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!