
ஜொகூர், CIQ – சுங்க குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தும் வளாகத்திலுள்ள, துப்புரவு பகுதியில் அறுவருக்கத்தக்க வகையில் சிறுநீர் கழித்த 69 வயது அந்நிய நாட்டு ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
நேற்று மாலை மணி 4.36 வாக்கில், அச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்தவுடன் அவ்வாடவன் கைது செய்யப்பட்டதாக, ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமரூல் ஜாமான் மாமாட் தெரிவித்தார்.
அவ்வாடவனை விசாரணைக்காக தடுத்து வைக்கும் அனுமதியை பெற இன்று அவன் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவான் எனவும் அவர் சொன்னார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஈராண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
முன்னதாக, ஜொகூர் CIQ கட்டட வளாகத்தில், ஆடவன் ஒருவன் சிறுநீர் கழிக்கும் பத்து வினாடி காணொளி சமூக ஊடகங்களில் பவரலாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் ஜொகூர் CIQ வளாகத்தில் பதிவுச் செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது சம்பவம் அதுவாகும்.
கடந்த வாரம் CIQ வளாகத்தில் மூடப்பட்டிருந்த முகப்புக்கு பின்னால் சிறுநீர் கழித்த பெண் ஒருவர் வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது.