மஞ்சோங், மார்ச்-4, பேராக், மஞ்சோங்கில் விரைவுப் பேருந்தும் நான்கு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்; அவர்களில் இருவர் கடுமையானக் காயங்களுக்கு இலக்காகினர்.
ஞாயிற்றுக்கிழமை ச்சாங்காட் செர்மின் அருகே, ஈப்போ-லூமூட் நெடுஞ்சாலையில் அவ்விபத்து நிகழ்ந்தது.
பேருந்து ஓட்டுநர், 19 பயணிகள், Toyota Hilux ஓட்டுநர் ஆகியோரே அவ்விபத்தில் காயமடைந்தவர்கள்.
எவரும் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளவில்லை என்றாலும், பேருந்து ஓட்டுநரும் ஒரு பெண் பயணியும் படுகாயம் அடைந்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் நோர்டின் அப்துல்லா சொன்னார்.
சம்பவத்தின் போது இரு வாகனங்களுமே லூமூட்டில் இருந்து ஈப்போ சென்றுக் கொண்டிருந்தன.
அப்போது அந்த Toyota Hilux ஓட்டுநர் திடீரென வலப்புறப் பாதையில் இருந்து இடப்புறம் மாறியுள்ளார்.
அதனை சற்றும் எதிர்பார்க்காத பேருந்து ஓட்டுநரால் Sudden break வைக்க முடியவில்லை; இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்தது.
அவ்விபத்து 1987-ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.