நியூ டெல்லி, ஜன 16 – இறந்த நபரின் உடல் குண்டும் குழியுமான சாலையில் ஆம்புலன்சில் கொண்டு வரும்போது உயிர்பிழைத்த சம்பவம் டெல்லியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
80 வயதான தர்ஷன் சிங் ப்ரார் என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அவரின் உடல் ஆம்புலன்சில் எடுத்து வரும்போது தர்ஷன் சிங்கின் பேரனும் உடனிருந்திருக்கிறார்.
அவர்கள் வந்துகொண்டிருந்த அந்த ஆம்புலன்ஸ் குண்டுன் குழியுமான பாதையில் சென்றுள்ளது அப்போது தர்ஷன் சிங்கின் உடல் லேசாக அசைவது போல இருந்துள்ளது.
இதனை பார்த்த பேரன் குழியில் விழுந்ததால் அசைவு ஏற்பட்டிருக்கும் என்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் கை கால்கள் அசைந்துள்ளன.
நடப்பது கனவா? நனவா? என்று ஒரு நிமிடம் வியப்புடன் பார்த்த அவரது பேரன், இதயத்துடிப்பு இருப்பதையும் கவனித்திருக்கிறார்.
உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்தபோது உயிர் இருந்துள்ளது.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், அவரின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை இன்னும் தாண்டவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மையாகவே இது ஒரு அதிசயம்தான் என்றும் விரைவில் அவர் உடல் நலம் தேறி வருவார் என்றும் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.