Latestமலேசியா

சிலாங்கூரில், கூடிய விரைவில் 3 மாதத்திற்கு தேவையான உணவு கையிருப்பு இருக்கும்

தங்சோங் காராங், பிப்ரவரி 26 – சிலாங்கூர் மாநிலத்தில், குறைந்தது மூன்று மாதத்திற்கு தேவையான உணவு கையிருப்பு இருக்க வேண்டுமென, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

வறண்ட காலம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட்டால், நிலைமையை சமாளிக்க அது அவசியமென அமிருடின் சொன்னார்.

அதனால், உணவு பொருட்களை சேமித்து வைக்க, வட சிலாங்கூரில் கிடங்கு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வரும் வேளை ; அரிசி மற்றும் கோழி போன்ற கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் சார்ந்த உணவு பொருட்களை சேமித்து வைக்க அது பயன்படுத்தப்படும்.

அத்திட்டம் முழுமைப் பெற்றால், மலேசியாவில், மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு கையிருப்பை கொண்டிருக்கும் ஒரே மாநிலமாக சிலாங்கூர் திகழுமென அமிருடின் சொன்னார்.

அது, சிலாங்கூரில் வசிக்கும் சுமார் 70 லட்சம் பேருக்கு, மூன்று மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்றாரவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!