கூலாய், மார்ச் 14 – ஜோகூர், கூலாயிலுள்ள AEON Mall பேரங்காடி பணியாளரிடன் ஆபாசமாக நடந்து கொண்ட ஆடவன் ஒருவனின் பதிவு வைரலாகியுள்ளது.
அச்சம்பவம் மார்ச் 11-ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
கழிவறைக்கு பின் தொடர்ந்து சென்ற அந்த 20 வயது மதிக்கத்தக்க ஆடவன், முதலில் பாதிக்கப்பட்ட பணியாளரிடன் எதார்த்தமாக பேச்சு கொடுத்துள்ளான்.
அந்த பணியாளரும் இயல்பாக பேசியதை தொடர்ந்து, அவரை பின் தொடர்ந்து சென்ற அவ்வாடவன், “உங்கள் அந்தரங்க உறுப்பை தொட முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளான்.
அதனால், சினமடைந்த அந்த பணியாளர் முறைத்து பார்ப்பதை கண்டவுடன், சம்பந்தப்பட்ட ஆடவன் அங்கிருந்து விரைந்து அகன்று சென்று விட்டான்.
அச்சம்பவத்தை, பாதிக்கப்பட்ட பணியாளர் தனது முகநூலில் பதிவிட்டதை தொடர்ந்து, வைரலாகியுள்ளது.
அதோடு, அந்த மர்ம நபரிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு அந்த பதிவின் வாயிலாக பாதிக்கப்பட்ட பணியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.