Latestமலேசியா

போலீஸ் அதிகாரி என நம்பி மோசடி பேர்வழியிடம் குடும்ப மாது 1.5 மில்லியன் ரிங்கிட் இழந்தார்

சிரம்பான், ஜன 22 – தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஆடவர் ஒருவர் தம்மை போலீஸ்  அதிகாரி என கூறிக்கொண்டு குடும்ப மாது ஒருவரை 1.5 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்துள்ளார். தொலைபேசி மோசடியில் கிட்டத்தட்ட  1.5 மில்லியன் ரிங்கிட் இழந்த அந்து   குடும்ப மாது இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார் என சிரம்பான் போலீஸ்  தலைவர் துணை கமிஷனர்  முகமட் ஹட்டா சே டின் தெரிவித்தார்.  தம்மை போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்டு அந்த நபர் சம்பந்தப்பட்ட குடும்ப மாது குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறார். அதோடு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களின் வங்கிக் கணக்கில்  பணப் பட்டுவாடா செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.  இதனை தொடர்ந்து அந்த பெண்  தன்னிடமிருந்த 1.5 மில்லியன் ரிங்கிட்டை அந்த மோசடி பேர்வழியிடம்  இழந்ததாக முகமட் ஹட்டா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!