Latestமலேசியா

ஜோ லோவிற்கு குவைத் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்தது

கோலாலம்பூர், மார்ச் 29 – குவைத் நீதிமன்றம், தேடப்பட்டு வரும் தொழிலதிபர் ஜோ லோவிற்கு ( Jho Low ), கள்ளப் பண மாற்றம் தொடர்பான குற்றத்திற்காக , 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்திருக்கிறது.

தனது பங்காளியுடன் சேர்ந்து ஷேக் ( Sheikh) எனும் ஓர் ஆடவருக்கும், இரு வெளிநாட்டு ஆடவர்களுக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக , குவைத்தின் Al – Qabas எனும் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியின் படி, மலேசிய நாட்டின் நிதியை உட்படுத்திய கள்ளப் பண மாற்றம் தொடர்பில் அவர்களுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு தண்டிக்கப்பட்ட அந்த 2 வெளிநாட்டவர்களில் ஒருவர் ஜொ லோவும் எனவும் பெயர் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, மலேசிய நிதி என அந்த ஊடகம் குறிப்பிடப்பட்டிருப்பது 1MDB நிதியே என Sarawak Report அதன் ஊடக அகப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!