
லண்டன், மே 9 – பிரிட்டனரின் இளவரசியாக இருந்த டயானா உலகளாவிய நிலையில் மிகவும் பிரசித்திப் பெற்ற பெண்மணியாக திகழ்ந்தவர்.
கலைத்துறையைச் சார்ந்தவராக இல்லாதபோதிலும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்னமும் இருந்து வருகின்றனர்.
1997ஆம் ஆண்டு அவர் இறந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை மன்னர் சார்ல்ஸ் அரியணை ஏறிய போது டயானா இல்லாத ஏக்கத்தை மீண்டும் ஏற்படுத்தியதாக வலைத்தளவாசிகள் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
இத்தருணத்தில் டயானா இறந்தப் பிறகு கமிலாவை கரம் பிடித்த மன்னர் சார்ல்ஸ் தம்பதியரின் முடிசூட்டு விழாவுக்குப் பின்னரான அதிகாரப்பூர்வ புகைப்படங்களை பக்கிங்கம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் மட்டுமே அரச குடும்பங்களில் முடி சூட்டு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.