கோலாலம்பூர், டிச 28 – ஐந்து மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 25,763ஆக குறைந்துள்ளது.
நேற்று காலையில் 28,310 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்ததை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை நேற்றிரவு 8 மணியளவில் 25,763 பேராக குறைத்தாக தேசிய பேரிடர் நிர்வாக மையமான நாட்மா ‘Nadma’ வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவித்திருக்கிறது.
கிளந்தானில் உள்ள 64 நிவாரண மையங்களில் 19,423 பேர் தங்கியுள்ளனர். திரெங்கானுவில் திறக்கப்பட்டுள்ள 60 நிவாரண மையங்களில் 5,983 பேர் தங்கியுள்ளனர். பகாங்கில் 206 பேரும் சபாவில் 30 பேரும், ஜோகூரில் 121 பேரும் நிவாரண மையங்களில் தங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திரெங்கானு, பஹாங், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இன்று தொடர்ந்து மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.