Latestமலேசியா

டிரெய்லர் கவிழ்ந்ததில் ஓட்டுனர் பலி

பேராக், தஞ்சோங் மாலிமிற்கு அருகே, தென் மாநிலங்களை நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், Treler ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குடைச்சாய்ந்ததில், அதன் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர், பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமை சேர்ந்த 36 வயது முஹமட் நோர் அப்ஜாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காஜாங் நோக்கி பயணமான அவர், சம்பவ இடத்தை அடைந்ததும் முன்னே சென்ற காரை மோதாமல் இருக்க அவசர பிரேக்கை அழுத்தியுள்ளார். அதனால் அவர் செலுத்திய Treler கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை மோதி குடைச்சாய்ந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் ஹஸ்னி முஹமட் நாசிர் தெரிவித்தார்.

உடலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!