டுங்குன், அக்டோபர்-10 – திரங்கானுவில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் மாது ஓட்டி வந்த கார் மோதி, UiTM எனப்படும் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் டுங்குன் கிளையைச் சேர்ந்த 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மேலுமொருவர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 7 மணி வாக்கில் Kampung Sura Hujung-கிலுள்ள பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே அக்கோர விபத்து நிகழ்ந்தது.
Kuala Dungun-னிலிருந்து Pantai Teluk Gadung நோக்கி 4 மாணவர்களும் சென்றுகொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை, பின்னால் வந்த SUV கார் வேகமாக மோதியது.
அதில் இரண்டாமாண்டு மாணவர்களான Muhammad Akmal Md Tukirin, Ku Adib Aizad Ku Azmi, Khairil Anwar Jamaludin ஆகிய மூவரும் கழுத்து எலும்பு முறிவுக்கு ஆளாகி, தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
அவர்களின் சகாவான
Muhammad Ammar Danish Mohammad Ridhuan படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேக நபரான 49 வயது மாது விசாரணைக்காக கைதுச் செய்யப்பட்டார்.