Latestமலேசியா

குழந்தை துன்புறுத்தல் பராமரிப்பாளர் கைது

சிரம்பான், பிப் 8 – நீலாயிலுள்ள வீடமைப்பு பகுதியில் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் 11 மாத பெண் குழந்தை துன்புறுத்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் குழந்தை பராமரிப்பாளரான 66 வயது பெண் கைது செய்யப்பட்டார். அக்குழந்தையின் தாயாரிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அந்த பெண்மணி கைது செய்யப்பட்டதாக நீலாய் OCPD அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார். இதற்கு முன் எந்தவொரு குற்றப்பதிவையும் கொண்டிருக்காத அந்த சந்தேகப் பேர்வழி நேற்று நண்பகல் மணி 12.30 அளவில் கைது செய்யப்பட்டார். 2001-ஆம் ஆண்டின் சிறார் சட்டத்தின் 31ஆவது உட்பிரிவு (1)(a) வின் கீழ் விசாரணைக்காக அந்த சந்தேகப் பேர்வழியை தடுத்து வைக்கும் உத்தரவை போலீசார் பெறுவார்கள் என அப்துல் மாலிக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!