கோலாலம்பூர், பிப் 8 – இந்த சனிக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டதை முன்னிட்டு நீட்டிக்கப்பட்ட விடுமுறை காலத்தின் மத்தியில் இன்று காலை பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து வாகனங்களின் நெரிசல் அதிகரிக்கத் தொடங்கின.
இன்று காலை 9 மணி நிலவரப்படி பெர்மாத்தாங் பாவ்வு-பெராய், ஸ்லிம் ரிவர்-சுங்காய், செத்தியா ஆலம்-ஷா ஆலம், பண்டார் கமுடா கோவ்-பண்டார் சௌஜானா புத்ரா ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள வேளை, வேலை நேரம் முடிந்து மாலையிலும் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக PLUS Malaysia Bhd தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில் அயர் கெரோ-ஜாசின் சாலையில் போக்குவரத்து வாகனங்கள் மெதுவாக நகர்வதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிழக்கு கடற்கரை விரைவு நெடுஞ்சாலை (LPT) 1, LPT 2, சுங்கை பெசி டோல் சாவடி மற்றும் ஸ்கூடாய் டோல் பிளாசாவில் போக்குவரத்து சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.