Latestமலேசியா

ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா தேர்தல்; சீத்தாராமன் தலைவரானார்!

ஈப்போ, நவ 28 – ஈப்போவிலுள்ள புந்தோங் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் ஆகியவற்றைப் பராமரிக்கும் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் புதிய தலைவராக இரா. சீத்தாராமன் என்ற பாபு தேர்வு பெற்றார். ஈப்போ மகா மாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்து சபா பரிபாலான தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சீத்தாராமனுக்கு 191 வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆர். சுப்ரமணியம் 125 வாக்குகளை பெற்று தோல்வி கண்டார்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.சுரேன், 184 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட எம். செளந்திர பாண்டியன் 112்வாக்குகளையும் பி. மாதவன் – 20 வாக்குகளையும் பெற்று, தோல்விக் கண்டதாக தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய எஸ்.மோகன் தெரிவித்தார்.

வி. எம்.தியாகராஜன் – 182, வாக்குகள் பெற்று செயலாளராகவும் , டாக்டர் எம். சந்திரன் 187 வாக்குகளைப் பெற்று துணைச் செயலாளராகவும் வெற்றி பெற்றனர். செயலவை உறுப்பினர்களாக ஆர்.சிவபாலன், கே.கோபிநாதன், பி.புருசோத்தமன், ஒய். மனோகர், எம்.நீலகண்டன், வி.கோட்டுப்பிள்ளை, கே.கண்ணையா, ஜி.மிருபராஜா, வி.யோகேஸ்வரி மற்றும் பி.உமாபரம் ஆகியோர் வெற்றிப் பெற்றனர். ஈப்போ இந்து தேவஸ்தானம் எதிர்நோக்கியுள்ள சங்க பதிவு இலாகா விவகாரம் மற்றும் கணக்கறிக்கை பிரச்சனைளுக்கும் அனைத்துக்கும் தீர்வு காண துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் புதிய தலைவரான சீத்தாராமன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!