Latestமலேசியா

தமிழ்ப் பள்ளி சீரமைப்பு பணி தொடர்பில் 25 லட்சம் ரிங்கிட் பொய் கணக்கு ; ஐவர் கைது

ஷா ஆலாம், மார்ச் 23 – தமிழ் பள்ளிகளுக்கான சீரமைப்பு பணிகளுக்காக 25 லட்சம் ரிங்கிட் பொய் கணக்கை காட்டிய விவகாரத்தில், MACC – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஐவரை தடுத்து வைத்தது.
40 வயதிலிருந்து 52 வயதுக்கு உட்பட்ட அந்த ஐவரும் 5 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர்.

2022-இல், சிலாங்கூரில் உள்ள ஆரம்ப தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் தொடர்பில் அந்த ஐவரும் பொய் கணக்கை காட்டியதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.
நேற்று, சிலாங்கூர் MACC தலைமையகத்துக்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!