
கோலாலம்பூர், ஜன 4 – தமது தம்பி சொந்த ஊருக்கு திரும்புவதைத் தடுப்பதற்காக, விமான பயண டிக்கெட்டை மறைத்து வைத்த செயலுக்காக, பாகிஸ்தானிய ஆடவர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
அண்ணனின் செயலால் ஆத்திரமடைந்த தம்பி, அவரை அடித்து , கத்தியால் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியதாக, Kuala Muda மாவட்ட போலீஸ் தலைவர் Zaidy Che Hassan தெரிவித்தார்.
கெடா, Sungai Petani, Taman Desa Meranti பகுதியில் நிகழ்ந்த அந்த சம்பவத்தை அடுத்து, அண்ணனை கத்தியால் குத்தியதாக ஒப்புக் கொண்ட ஆடவன், 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக Zaidy குறிப்பிட்டார்.