Latestமலேசியா

சீனப் பிரஜைக்கு சொந்தமான மறுசுழற்சி பொருட்கள் தொழிற்சாலையில் குடிநுழைவுத்துறை சோதனை -5 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் பறிமுதல்

புத்ரா ஜெயா, மார்ச் 21 – சிலாங்கூர் ,  கிள்ளானில் சீனப் பிரஜைக்கு சொந்தமான மின்னியல் மறுசுழற்சி பொருள் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமையன்று குடிநுழைவுத்துறை சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. மாலை மணி 4 அளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த சோதனை நடவடிக்கையின்போது அந்த தொழிற்சாலையின் இயக்குனர் மற்றும் அதன் உரிமையாளர் உட்பட 48 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 688,900 ரிங்கிட் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரைச் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக உளவு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு கண்காணிப்பை மேற்கொண்டதை தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

புத்ரா ஜெயாவின் அமலாக்க தடுப்பு பிரிவு, குடிநுழைவுத்துறையின் உளவு, சிறப்பு நடவடிக்கை பிரிவின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ Ruslin Jusoh கூறினார். தகவல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் பெறப்பட்ட தகவலைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் முதலில் நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டு பின்னர் அந்த தொழிறிசாலையின் இயக்குனர் மற்றும் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். அந்த தொழிற்சாலையின் இயக்குநர்கள் என நம்பப்படும் இரண்டு ஆடவர்கள் மற்றும் மூன்று பெண்களுடன் இதர 46 தனிப்பட்ட நபர்களும் கைது செய்யப்பட்டதாக Ruslin தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!