கோலாலம்பூர், பிப்ரவரி 13 – தலைநகர், செராஸ், ஸ்ரீ சபா அடிக்குமாடி குடியிருப்பிலுள்ள, ஆறு வீடுகள் தீக்கிரையாவதற்கு, மின்சார இணைப்பு முறையே காரணம்.
குறிப்பாக, 17 மாடியிலுள்ள, மூன்றாவது வீட்டில் அந்த கோளாறு அடையாளம் காணப்பட்டிருப்பதாக, கோலாலம்பூர் தீயணைப்பு மீட்பு துறை இயக்குனர் முஹமட் சாலே அப்துல் தெரிவித்தார்.
தடயவியல் மற்றும் சோதனை நடவடிக்கை வாயிலாக அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சாலே சொன்னார்.
அதனால், அந்த தீ விபத்து பட்டாசுகளால் ஏற்பட்டது என கூறப்படுவதையும் அவர் நிராகரித்தார்.
சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து அதிவேகமாக பரவிய தீ, அதே மாடியிலிருந்த இதர ஐந்து வீடுகளை அழித்தது.
இவ்வேளையில், தீயணைப்பு படையின் நீர் குழாய் செயல்படாததால், தீயை அணைக்க முடியாமல் போனதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் சாலே மறுத்தார்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு, அந்த குழாயை முறையாக இயக்கத் தெரியவில்லை என்றாரவர்.