Latestமலேசியா

சபா பெனாம்பாங் காட்டில் காணாமல்போன 6 வயது சிறுமி எவலின் ஆறு மணி நேரத்திற்குப் பின் மீட்பு

பெனம்பாங், மார்ச் 2 – சபாவில் பெனம்பாங்கில் கம்போங் சுகுட்டில் தமது வீட்டிற்கு அருகேயுள்ள காட்டில் காணாமல் போன, ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, ஆட்டிசம் குறைபாடு உள்ள ஆறு வயது சிறுமி அவெலின் அலேஷா ஜூட் பாதுகாப்புடன் மீட்கப்பட்டார். நேற்று மாலை முதல் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சிறுமி எவலின் நேற்றிரவு 10 மணியளவில் தமது வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காட்டில் கிராமவாகிகளின் உதவியோடு கண்டுப்பிடிக்கப்பட்டார். எவலின் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது குறித்து தங்களது ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும் இறைவனுக்கு நன்றி கூறுவதாக அச்சிறுமியின் உறவினரான மெஸ்டன் ஈடன் தெரிவித்தார்.

தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸ் ,தீயணைப்பு படையின் மீட்புக்குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அந்த சிறுமி மீண்டும் கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதை சபா தீயணைப்பு ,மீட்புத்துறையின் நடவடிக்கை மைய அதிகாரி உயர் துணை ஆணையர் முகமட் இஷாக் அம்ரான்னும் உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!