
பேங்கோக், ஏப்ரல்-25- தாய்லாந்தில் ஒரு உல்லாசத் நகருக்கு அருகே வான்குடைப் பயிற்சியின் போது சிறிய விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து போலீஸ்காரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலுமொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பேங்கோக்கிற்கு தெற்கே உள்ள பிரச்சுவாப் கிரி கான் (Prachuap Khiri Khan) மாநிலக் கடற்கரையில் இன்று காலை 8 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுப் பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முழு விசாரணை நடைபெறுமென மாநில போலீஸ் தலைவர் உறுதியளித்தார்.
கடலில் விழுவதற்கு முன்பு விமானம் சுழன்று சுழன்று செல்வதையும், மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதையும் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோக்கள் காட்டுகின்றன.