மும்பை, மார்ச் 15 – பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
81 வயதான முன்னணி திரை நடிகரான அமிதாப் பச்சனின் கால் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளதாக நம்பப்படுகிறது.
இது குறித்து அமிதாப் பச்சன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “எப்போதும் நன்றியுடன்” எனப் பதிவிட்டு தான் நலமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்பதிவு வைரலாகி, அவர் விரைவில் மீண்டுவர அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.