கோலாலம்பூர், மார்ச் 1 – Terengganu வில் வெள்ளத்தினால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் கிளந்தானில் வெள்ள நிலைமை சீரடையத் தொடங்கியுள்ளது.
இன்று காலைவரை திரெங்கானுவில் 4,557 குடும்பங்களைச் சேர்ந்த 17,742 பேர் வெள்ளத்தின் காரணமாக நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஆற்றோரங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் குறிப்பாக Kemaman னில் நேற்றிரவு அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர்.
திரெங்கானு மாநிலத்தில் தற்போது 141 நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கிளந்தான் மாநிலத்தில் பல இடங்களில் வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து துயர் துடைப்பு நிலையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சமூக நலத்துறை அறிவித்துள்ளது.