Latestமலேசியா

திரெங்கானு Padang Astaka Chukai-யில் மோட்டார் சைக்கிளில் சந்தைக் கடையை மோதிய மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் தாக்கப்பட்டார்

ச்சுக்காய், ஜனவரி-18 – திரங்கானு, கெமாமானில் உள்ள விவசாயச் சந்தையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

Padang Astaka Chukai-யில் நேற்று காலை அச்சம்பவம் நிகழ்ந்தது.

47 வயது அவ்வாடவர்  ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், தவறுதலாக அங்குள்ள அங்காடிக் கடையொன்றை மோதியிருக்கிறது.

இதனால் வியாபாரப் பொருட்கள் கீழே விழ, ஆத்திரமடைந்த சிலர் அந்நபரை சரமாரியாகத் தாக்கினர்.

அதில் சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளாகி அவ்வாடவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ காணொலி வைரலாகியுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் போலீஸ் தேடுகிறது.

நேரில் பார்த்த சாட்சிகள் விசாரணைக்கு வந்துதவுமாறும் கெமாமான் போலீஸ் கேட்டுக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!