Latest

தீ விபத்தில் ஆறு வீடுகள் அழிந்தன நால்வர் உயிர் தப்பினர்

கோத்தா கினபாலு , பிப் 6 – கோத்தா கினபாலு, Sepanggar, Kampung Sepakat Jaya வில் இன்று காலையில் நிகழ்ந்த தீ விபத்தில் பயங்கர வெடிச்சத்தத்தை கேட்டு தூக்கத்திலிருந்து விழித்ததால் கணவன் ,மனைவி மற்றும் அவர்களது இரு குழந்தைகள் உயிர் தப்பினர். அந்த தீவிபத்தில் ஆறு வீடுகள் அழிந்தன. தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் ஒருவர் சுவாசிப்பதில் பிரச்சனைக்கு உள்ளானதத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். காயம் அடைந்த மற்றொரு நபருக்கு தீயணைப்பு வீரர்கள் முதலுதவி வழங்கினர். தீ மிகவும் வேகமாக பரவியதால் வேறு எந்தவொரு பொருட்களையும் எடுக்க முடியாமால் கட்டிய துணியோடு மனைவி பிள்ளைகளுடன் வெளியேறியதால் உயிர் தப்பியதாக 34 வயது ஆடவர் ஒருவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!