Latestஉலகம்

இஸ்ரேல் துருப்புக்கள் ஊடுருவிய வட காஸா மருத்துவமனை செயல்படவில்லை; உலக சுகாதார நிறுவனம் தகவல்

கெய்ரோ, டிச 19 – இஸ்ரேல் துருப்புக்கள் ஊடுருவிய வட காஸா மருத்துவமனை செயல்படவில்லையென, WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  குழந்தைகள் உட்பட அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கமால் அட்வான் மருத்துவமனையில்  புகலிடம் தேடி கூடியிருந்த மக்களை கடந்த வாரம் இஸ்ரேலிய துருப்புக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதோடு புல்டோசர் “bulldozer” பயன்படுத்திய அந்த மருத்துவமனையின் பகுதியொன்றை நொறுக்கியதாகவும் காஸாவிலுள்ள அதிகாரிகள் கூறினர். 

அந்த மருத்துவமனையை ஹமாஸ்  தரப்பினர் பயன்படுத்தி வந்ததாக  இஸ்ரேல்  கூறியிருந்தது.  அந்த மருத்துவமனை குறித்த மேல் விவரங்களை தாங்கள் திரட்டி  வருவதாக   காஸாவிலுள் உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.  23 லட்சம் மக்கள் காஸாவில் வாழ்ந்து வந்தனர். அக்டோபர்  7ஆம் தேதி ஹமாஸ் தரப்பிறகு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காஸாவிலுள்ள பெரும்பாலான மக்கள் அங்கிருந்து  பல இடங்களுக்கு வெளியேறிவிட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!