கோலாலம்பூர், ஜன 19 – இவ்வாண்டு பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் மலேசிய ஹாக்கிக் குழுவின் கனவு சிதைந்தது. முஸ்கட்டில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் தகுதி சுற்று ஹாக்கி போட்டியில் மலேசிய குழு பாகிஸ்தான் அணியை வீழ்த்தத் தவறியதால் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெறும் வாய்ப்பை இழந்தது. அந்த ஆட்டத்தில் தேசிய ஹாக்கிக் குழு 3-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் சமநிலைக் கண்டது. பிரிட்டன் 6 -0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியிருந்தால் மலேசியக் குழு பாகிஸ்தானை வென்றால் அரையிறுதி ஆட்ட வாய்ப்பை பெறமுடியும் என்ற நிலை இருந்தாலும் அந்த வாய்ப்பை தேசிய ஹாக்கிக் குழுவினர் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை .
பாகிஸ்தானை வீழ்த்த தவறியது , மற்றும் சீனாவிடம் ஏற்பட்ட தோல்விக்கு மலேசியா பல்வேறு காரணங்களை கூறினாலும் 2,000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டி முதல் அடுத்தடுத்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை மலேசிய குழு இழந்தது விளையாட்டு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.