கோலாலம்பூர், ஜன 14 – புதிதாய் பிறக்கும் தைப்புத்தாண்டை இந்திய சமூகம் ஒன்றிணைந்து வரவேற்கும் வகையில் மஇகா தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்தை அதன் தலைமையகத்தில் நாளை ஏற்பாடு செய்துள்ளது.
கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் 1000த்திற்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருக்கும் இந்த கொண்டாட்டத்தில் பொது மக்களும் கலந்து சிறப்பிக்க வருமாறு கட்சியின் உதவித் தலைவர் டத்தோ முருகையா அழைப்பு விடுத்துள்ளார்.
மதியம் இரண்டு மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் பொங்கல் வைக்கும் வைபவத்தோடு கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம் பெறும் என அவர் கூறினார்.