Latestஉலகம்

தென் கொரியாவில் மீண்டும் சாலை உள்வாங்கியது; 2 டிரக் வாகனங்கள் உள்ளே விழும் அளவுக்கு ஏற்பட்ட பெரியக் குழி

பூசான், செப்டம்பர் -22, தென் கொரியா பூசானில் (Busan) கனமழையின் போது சாலை உள்வாங்கியதில், 2 டிரக் லாரிகள் 8 மீட்டர் ஆழ குழிக்குள் விழுந்தன.

பூசான் நகரில் வெள்ளிக்கிழமையன்று 200 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழைக் கொட்டித் தீர்த்த போது, 10 மீட்டர் அகலம், 5 மீட்டர் நீளத்திற்கு அப்பெரியக் குழி உருவாகியது.

குழிக்குள் விழுந்த வாகனங்களில் ஒன்று பூசான் தீயணைப்புப் படையின் வடிகால் டிரக் ஆகும்; மற்றொன்று அவ்வழியே வந்த டரக் லாரியாகும்.

நல்லவேளையாக அதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

நில அமிழ்வுக்கான உண்மைக் காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தென் கொரியத் தலைநகர் சியோலில் செப்டம்பர் 1-ம் தேதி இதே போல் சாலையின் நடுவே திடீர் பள்ளமேற்பட்டு வயதான தம்பதி காரோடு விழுந்து காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!