கோத்தா திங்கி, டிசம்பர் 7 – ஜொகூர், கோத்தா திங்கி, பெல்டா புக்கிட் அபிங் பகுதியில், புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்படுவதை, மாநில PERHILITAN – தேசியப் பூங்கா, வனவிலங்கு பாதுகாப்பு துறை விசாரித்து வருகிறது.
கால் தடம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது.
புலியின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளது.
அந்த கால்தடம்,சுற்று வட்டார மக்களை அச்சத்தில் உரைய வைத்துள்ளது.
அண்மையில், கிளந்தான், கூவா மூசாங்கில், புலி தாக்கி சிலர் உயிரிழந்த சம்பவம் போல, பெல்டா புக்கிட் அபாங்கிலும் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம், அங்குள்ள மக்களிடையே மேலோங்கியுள்ளது.
அதனால், அச்சம்பவம் தொடர்பில், PERHILITAN விரைந்து விசாரணையை மேற்கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.