சீனா, ஜன 3 – எலி தன்னை கடித்ததால் ஆத்திரத்தில் இளம்பெண் ஒருவர் அதனை திரும்ப கடித்த அதிர்ச்சி சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.
18 வயதான அம்மாணவியின் விரலை எலி ஒன்று எதிர்பாராத விதமாக கடித்துள்ளது. வலியால் துடித்த மாணவி எலியை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.
இதனால், உடனடியாக தன்னை கடித்த எலிக்கு பொறி வைக்க, அவ்வெலியும் அதில் மாட்டிக் கொள்ள, உடனே ஆத்திரம் தாங்காமல் அதனை வெறித்தனமாகக் அதன் தலைப்பகுதியில் கடித்து தன்னுடைய கோபத்தை தீர்த்துள்ளார்.
இச்சம்பவத்தில் எலியின் உயிர் பறிபோனது. இதனிடையே, எலி கடித்ததில் உதட்டில் காயமடைந்த அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் வலைத்தளவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.