கோலாலம்பூர், டிச 22 – கோலாலம்பூரில் ஜாலான் சிலாங் மற்றும் கோத்தா ராயா பகுதியில் போலீஸ் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் ஆவணங்களை கொண்டிருக்காத 1,101 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
Bukit Aman-னின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத்துறை தலைமையேற்ற அந்த கூட்டு நடவடிக்கை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் கமிஷனர் அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார். 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
இரண்டு குழந்தைகள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,101 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அலாவுதீன் கூறினார்.
ஜாலான் சிலாங் மற்றும் கோத்தா ராயா பகுதி சுற்றி வளைக்கப்பட்டதால் தப்பியோட முயன்றவர்கள் பிடிபட்டனர். பல்வேறு குற்றங்களுக்காக வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மேல் நடவடிக்கைக்காக குடிநுழைவுத்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என அலாவுதீன் கூறினார்