Latestமலேசியா

கோத்தா திங்கி ஆற்றில் முதலை தென்படும் காணொளி வைரல்; சுற்று வட்டார மக்கள் பீதி

கோத்தா திங்கி, ஜனவரி 10 – ஜோகூர், கோத்தா திங்கி ஆற்றில், முதலை ஒன்று தென்படும் காணொளி வைரலாகியுள்ளது.

வெள்ளம் காரணமாக பெருக்கெடுத்து ஓடும் நீரில் அந்த முதலை அடித்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

செடிலியில் பதிவுச் செய்யப்பட்ட அந்த முதலை தென்படும் காணொளி, உள்ளூர் நபர் ஒருவரின் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து வைரலாகியுள்ளது.

அது, சுற்று வட்டார மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும், அந்த முதலை குறித்து இதுவரை புகார் எதுவும் செய்யப்படவில்லை என, கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹுசைன் ஜமோரா தெரிவித்தார்.

அதோடு, அது தொடர்பான காணொளி கோத்தா திங்கியில் பதிவுச் செய்யப்பட்டதா இல்லை வேறு இடத்தில் பதிவுச் செய்யப்பட்டதா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை என ஹுசைன் சொன்னார்.

அதனால், வைரலாகி இருக்கு காணொளி குறித்து ஆருடங்களை வெளியிட வேண்டாம் என அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!