Latestமலேசியா

தோம்மி தோமஸ் புத்தகத்தை விசாரிக்க அரச விசாரணை ஆணையத்தை அமைக்க அரசாங்கம் இணக்கம்

கோலாலம்பூர், ஜன 12 – முன்னாள் சட்டத் துறை தலைவர் Tommy Thomas எழுதிய My Story : Justice In the Wilderness எனும் புத்தக்கத்தில் குறிப்பிடபட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, அரச விசாரணை ஆணையத்தை அமைக்க அரசாங்கம் இணங்கியிருக்கின்றது.

அவரது குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மையை கண்டறியவும், சட்டத் துறையை சீர்திருத்தக் கூடிய பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன் வைக்கவும் , அந்த அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக, சட்ட விவகார அமைச்சர் Datuk Seri Azalina Othman தெரிவித்தார்.

அதே வேளை, எந்தவொரு தரப்பின் தவற்றினைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தை அந்த விசாரணை ஆணையம் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!